Saturday 13 February 2016

அனுமன் சாலிஸாவின் மகிமை.

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர் " நீர் பெரிய ராமபக்தர், பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே....எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்".என்றார்.


நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே...என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்.  எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம். என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர்மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழிபட்டார்.  


இப்படி நாற்பது பாடல்கள் எழுதியதும்,திடீரென  எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள்  அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன. 


படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
 அக்பரிடம் சிலர் ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப் படுத்துவதால் ஆஞ்சநேயருக்கு கோபம் வந்திருக்கிறது. துளசிதாசரை விடுவித்தால் பிரச்சினை நீங்கிவிடும். என்று ஆலோசனை அளித்தனர். 


அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து  வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே  வானரப்படைகள் மாயமாய் மறைந்தன.


 துளசிதாசர் சிறையில் இருந்த போது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ஸ்ரீ அனுமான்சாலிஸா.  இதை தினமும் பாராயணம் செய்தால் துன்பங்கள் நீங்கும்.. நன்மைகள் தேடிவரும்....

அடுத்த பதிவாக  அனு
மான் சாலிஸா வை போடறதாக இருக்கேன்.

2 comments:

  1. //துளசிதாசர் சிறையில் இருந்த போது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ஸ்ரீ அனுமான்சாலிஸா. இதை தினமும் பாராயணம் செய்தால் துன்பங்கள் நீங்கும்.. நன்மைகள் தேடிவரும்....//

    மிகவும் நல்லதொரு செய்தி.

    //அடுத்த பதிவாக அனுமான் சாலிஸா வை போடறதாக இருக்கேன்.//

    போடுங்கோ.... போடுங்கோ.... பலருக்கும் தெரிந்திருக்கலாம். சிலருக்குத் தெரியாமலும் இருக்கலாம்.

    அதனால் நீங்க போடுங்கோ.... போடுங்கோ.

    ReplyDelete
  2. யாரு வந்து படித்து பயன் பெறுகிறாரகளோ இல்லையோ என் அன்புக்குரிய கோபால் சார் கண்டிப்பா வருவாங்க. அதுவே எனக்குப்போதும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete