Sunday 13 November 2016

abiraami 55, 56, 57, 58, 59, 60....

யாவ‌ரையும் வ‌சீக‌ரிக்கும் ஆற்றல் உண்டாக‌
56: ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்--
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.
வ‌றுமை ஒழிய‌
57: ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே?
ம‌ன அமைதிபெற
58: அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.
பிள்ளைக‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ வ‌ள‌ர
59: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.
மெய்யுண்ர்வு பெற
60: பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க--
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும், சால நன்றோ--அடியேன் முடை நாய்த் தலையே?

Friday 4 November 2016

abiraami 51`, 52, 53, 54, 55.....

மோக‌ம் நீக்க‌
51: அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.
பெருஞ்செல்வ‌ம் அடைய‌
52: வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,--பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
பொய்யுணர்வு நீங்க‌
53: சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.
க‌ட‌ந்தீர‌
54: இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
மோன‌ நிலை எய்த‌
55: மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லை

Saturday 22 October 2016

abiraami 46, 47, 48, 49, 50....

ந‌ல்நட‌த்தையோடு வாழ
46: வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.
யோக‌ நிலை அடைய‌
47: வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
உட‌ல்ப‌ற்று நீங்க‌
48: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
ம‌ர‌ணத்துன்ப‌ம் இல்லாதிருக்க‌
49: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே. 
அம்பிகையை நேரில் காண
50: நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.

Sunday 2 October 2016

abiraami 41`, 42, 43, 44, 45.....

ந‌ல்ல‌டியார் ந‌ட்பும் பெற‌
41: புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.
உல‌கினை வ‌ச‌ப்ப‌டுத்த‌
42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.
தீமைக‌ள் ஒழிய‌
43: பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
பிரிவுணர்ச்சி அக‌ல‌
44: தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.
உல‌கோர் ப‌ழியிலிருந்து விடுப‌ட
45: தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே

Thursday 8 September 2016

abiraami 36, 37, 38, 39,, 40....

ப‌ழைய‌ வினைக‌ள் வ‌லிமை அழிய‌
36: பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.
ந‌வ‌ம‌ணிக‌ளைப் பெற‌
37: கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.
வேண்டிய‌தை வேண்டிய‌வாறு அடைய‌
38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.
க‌ருவிக‌ளைக் கையாளும் வ‌லிமை பெற
39: ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள்.
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.
பூர்வ‌ புண்ணிய‌ம் ப‌ல‌ன்த‌ர‌
40: வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே

Tuesday 16 August 2016

abiraami 31`, 32, 33, 34, 35...

ம‌றுமையில் இன்ப‌ம் உண்டாக‌
31: உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.
துர்ம‌ர‌ண‌ம் வ‌ராம‌லிருக்க‌
32: ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.
இற‌க்கும் நிலையிலும் நினைப்போடு இருக்க‌
33: இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே
சிற‌ந்த‌ ந‌ன்செய் நில‌ங்க‌ள் கிடைக்க‌
34: வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.
திரும‌ண‌ம் நிறைவேற
35: திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே

Sunday 7 August 2016

abiraani 26, 27, 28, 29, 30....

சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக‌
26: ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே.
ம‌ன‌நோய் அக‌ல‌
27: உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.
இம்மை ம‌றுமை இன்ப‌ங்க‌ள் அடைய‌
28: சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.
எல்லா சித்திக‌ளும் அடைய‌
29: சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
அடுத்த‌டுத்து வ‌ரும் துன்ப‌ங்க‌ள் நீங்க‌
30: அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே

Saturday 30 July 2016

abiraami 2`1, 22, 23, 24, 25.....

அம்பிகையை வழிப‌டாம‌ல் இருந்த‌ பாவ‌ம் தொலைய‌
21: மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.
இனிப்பிற‌வாநெறி அடைய‌
22: கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
எப்போதும் ம‌கிழ்ச்சியாய் இருக்க‌
23: கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.
நோய்க‌ள் வில‌க‌
24: மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.
நினைத்த‌ காரிய‌ம் நிறைவேற‌
25: பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.-
என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே

Wednesday 20 July 2016

abiraami 1`6, 1`7.,`18, 1`9, 20.....

முக்கால‌மும் உண‌ரும் திற‌ன் உண்டாக‌
16: கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.
க‌ன்னிகைக‌ளுக்கு ந‌ல்ல‌ வ‌ர‌ன் அமைய‌
17: அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
ம‌ர‌ண‌ப‌ய‌ம் நீங்க‌
18: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.
பேரின்ப‌ நிலைய‌டைய‌
19: வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
வீடுவாச‌ல் முத‌லிய‌ செல்வ‌ங்க‌ள் உண்டாக‌
20: உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே.

Monday 11 July 2016

abiraami 1`0, 1`1` , 12, 1`3, 1`4, `15......

மோட்ச சாதனம் பெற
10: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.
இல்வாழ்க்கையில் இன்பம்பெற
11: ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
தியானத்தில் நிலைபெற
12: கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவ
ளே.
வைராக்கிய நிலைபெற
13: பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?
தலைமை பெற
14: வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே:
பெருஞ் செல்வமும் பேரின்பமும் பெற
15: தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே

Saturday 9 July 2016

abiraami 6, 7, 8, 9.....

மந்திர சித்தி பெற
6: சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.
மலையென வருந் துன்பம் பனியென நீங்க
7: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.
பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
8: சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே
அனைத்தும் வசமாக
9: கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

Tuesday 5 July 2016

abiraami 3 , 4, 5

குடும்பக்கவலையிலிருந்து விடுபட
3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
உயர்பதவிகளை அடைய
4: மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
மனக்கவலை தீர
5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

Sunday 26 June 2016

abirami anthaathi (1,2)

அபிராமி அந்தாதி

காப்பு
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு
ஞானமும நல்விதையும் பெற
1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:
பிரிந்தவர் ஓன்று சேர
2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

Saturday 25 June 2016

கோளறுபதிகம் (11`)

11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

Friday 24 June 2016

கோளறுபதிகம் (10)

10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.

Tuesday 21 June 2016

கோளறுபதிகம் (9)

9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேருமுதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.

Tuesday 14 June 2016

கோளறுபதிகம் (8)

8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

Monday 6 June 2016

கோளறுபதிகம் (7)

7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

Tuesday 31 May 2016

கோளறுபதிகம் (6)

6.வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம்ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

Tuesday 24 May 2016

கோளறுபதிகம் (5)

5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

Wednesday 18 May 2016

கோளறுபதிகம் (4)

4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.

Tuesday 3 May 2016

கோளறுபதிகம் (3)

3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.

Sunday 24 April 2016

கோளறு பதிகம் (2)

2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்;
ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை;
ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

Sunday 17 April 2016

கோளறு பதிகம் (1`)

1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும்
ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!

Saturday 9 April 2016

தோடகாஷ்ட்டகம்

தோடகாஷ்டகம் விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே மஹிதோப நிஷத் கதிதார்த நிதே | ஹ்ருதயே கலயே விமலம் சரணம் பவ சங்கர தேசிக மே சரணம் || 1 ||

 ண கருணா வருணாலய பாலய மாம் பவஸாகர துக்க விதூன ஹ்ருதம் | ரசயாகில தர்சன தத்வ விதம் பவ சங்கர தேசிக மே சரணம் || 2 ||

 பவதா ஜனதா ஸுஹிதா பவிதா நிஜபோத விசாரண சாருமதே | கலயேஸ்வர ஜீவ விவேக விதம் பவ சங்கர தேசிக மே சரணம் || 3 ||

 பவ எவ பவானிதி மெனிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா | மம வாரய மோஹ மஹா ஜலதிம் பவ சங்கர தேசிக மே சரணம் || 4 ||

 சுக்ருதே‌ உதிக்ருதே பஹுதா பவதோ பவிதா ஸமதர்சன லாலஸதா | அதி தீனமிமம் பரிபாலய மாம் பவ சங்கர தேசிக மே சரணம் || 5 ||

 ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ விசரன்தி மஹாமாஹ ஸச்சலத: | அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ பவ சங்கர தேசிக மே சரணம் || 6 || 

குருபுங்கவ புங்கவகேதன தே ஸமதாமயதாம் நஹி கோ‌பி ஸுதீ: | சரணாகத வத்ஸல தத்வ நிதே பவ சங்கர தேசிக மே சரணம் || 7 ||

 விதிதா நமயா விதைக கலா ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ | து மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம் பவ சங்கர தேசிக மே சரணம் || 8 ||

Friday 1 April 2016

தோடகாஷ்ட்டகம் (சிறு விளக்கம்)

ஆத்மாவின் பூரணத்துவத்தை உண்மையை உணர்வதே உயிர்கள் உய்வதற்குரிய வழி. அந்த வழியை காண்பித்து உதவ குருவைத்தவிர வேறு ஒருவரும் துணையில்லை. பல வழிகள் பல மதங்கள் பல தத்துவங்கள் இருந்த போதும் குருவின் பெருமை எல்லாவற்றிலும் வலியுறுத்தபட்டிருக்கிறது. வைணவ மரபில் இறைவனுக்கு ஒரு தவறு இழைத்தாலும் பெரிய தண்டனை இல்லை. குருவின் கருணையிருந்தால் போதும் என்ற நம்பிக்கை உண்டு.
அத்வைத தத்துவங்களிலும் குருவின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது. அடைய வேண்டிய நிலை, அதற்கு உதவும் குரு, முயற்சி செய்யும் சீடன் என்று மூன்று பேர் இருந்த போதும் இவர்கள் மூன்று பேருமே ஒருவர்தான் – உணர்தலில் தான் வேறுபாடு உள்ளது என்ற பொருள் படும்படி ஆதி சங்கரரின் ஸ்லோகங்கள் உண்டு.
ஆதிசங்கரரின் சீடர்களில் தோடகர் என்றொரு மகான். அவர் இயற்றிய
தோடகாஷ்டகம் என்னும் எட்டு ஸ்லோகங்கள் ஜகத்குருவான ஆதிசங்கரரின் பெருமைகளை பறை சாற்றுகின்றன. இந்த தோடகாஷ்டகம் என்ற ஸ்லோகங்கள் மிகவும் கடினமான சங்கத இலக்கண அடிப்படையில் இருந்தாலும் ஓதுவதற்கு மிகவும் அழகானவையாக நயமானதாக இருக்கின்றன.
இந்த தோடகாஷ்டகத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் படிக்கும் போது ஆதிசங்கரரின் பெருமையும் தெய்வீகமும் வெளிப்படுவதோடல்லாமல் அவரிடம் தோடகருக்கிருந்த குருபக்தியும் வெளிப்படையாகிறது.

(  கோபால்ஸார், நீங்க ஆதி சங்கரரின் தொடர் பதிவில் இந்த ஸ்லோகத்தின் பெருமைகள் பற்றி சொல்லி இருந்தீங்க.... அதான் இங்க போட்லாம்னு நினைத்தேன்...)
அடுத்தவாரம் ஸ்லோகம் தொடரும்.. இப்ப ஒரு சின்ன விளக்கம் மட்டுமே..

Friday 25 March 2016

ஹனுமான் சாலிசா (6 நிறைவு)

ஜோ யஹ படை ஹனுமான சாலிஸா ஹோய சித்தி ஸாகி கெளரிஸா (39) எவர் ஒருவர் அனுமான் நாற்பது துதியை படிப்பாரோ அவர் சித்தி பெறுவர் அதற்கு சிவனே சாட்சி. துலஸிதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய


மஹம் டேரா. (40) துளஸிதாஸ் எப்பொழுதும் அரியின் சேவகனாம் அவன் உள்ளத்தினில் நாதா! என்றும் உறைவாயே! பவன தனய ஸங்கட ஹரண மங்கள மூர்த்தி ரூப ராம லகன சீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப சங்கடம் நீக்கிடும் மங்கள சொரூபியே! வாயு மைந்தனே! எங்களது இதயத்தில் இராம இலக்குவ சீதா சமேதராய் உறைவாயே!

Friday 18 March 2016

ஹனுமான் சாலிசா (5)

ராம ரஸாயன தும்ஹரே பாஸா ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா … (32) இராம நாமம் எனும் அருமருந்து உன்னிடமுண்டு இராம தாஸனாய் எப்பொழுதும் புரிந்திடு தொண்டு தும்ஹரே பஜன ராம கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக


பிஸ்ராவை .. (33) உன்னை பஜனை செய்யும் பக்தர்கள் இராமனை அடைவரே ஜன்ம ஜன்மமாய் தொடரும் துக்கங்கள் அகன்றிடுமே! அந்த கால ரகுபர புர ஜாயி ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ.. (34) அந்திம காலத்தில் இராமனின்


இருப்பிடம் அடைவோர் அங்கு அவர்கள் அரியின் அடியவன் என்று அழைக்கப்படுவர் ஒளர தேவதா சித ந தரயி ஹனுமத ஸேயி ஸர்வ சுக கரயி.. (35) அனுமனே! உன்னை வழிபட்டாலே சர்வ சுகங்களும் கிட்டுமே பின்னே வேறு தெய்வம் எதையும் தியானிக்க தேவையில்லையே! ஸங்கட


கடை மிடை சப பீரா ஜோ சுமிரை ஹனுமத பல்பீரா (36) எல்லாம் வல்ல அனுமனைத் தியானிக்கும் அடியவரின் எல்லா துன்பங்களும் துயரங்களும் தீர்ந்து விலகுமே. ஜய ஜய ஜய ஹனுமான கோஸாயி க்ருபா கரஹ குருதேவ கீ

நாயி … (37) ஜயம் ஜயம் ஜயம் உமக்கு அனுமானே பரம் குருவே எப்போதும் அருள்புரீவிரே! ஜோ ஷத பார பாட கர கோயி சுட்ஹி பந்தி மஹாஸுக

ஹோயி (38) எவர் ஒருவர் இத்துதியை நூறு முறை படிப்பாரோ அவர் பந்தங்களினின்று விடுபட்டு பரம சுகம் பெறுவரே!

Friday 11 March 2016

ஹனுமான் சாலிசா (4)

நாஸை ரோக ஹரை ஸப பீரா ஜபத நிரந்தர ஹனுமத பீரா …. (25) எந்நோயும் தீருமே துன்பம் நீங்குமே என்னேரமும் அனுமது நாமத்தை ஜபித்தால் ஸங்கட


தே ஹனுமான சுடாவை மன க்ரம வசன த்யான ஜோ லாவை .. (26) எவர் மனம் வாக்கு செயலால் தியானிக்கிறாரோ அவரை அனுமான் துன்பங்களிலிருந்து விடுவிப்பார் ஸப பர ராம தபஸ்வி ராஜா தின்கே காஜ


சகல தும ஸாஜா ……….. (27) இணையிலா தபஸ்வியும் அரசனுமான இராமனின் பணியெலாம் பரிபூர்ணமாய் நிறைவேற்றினாய் நீ! ஒளர மனோரத ஜோ கோயி லாவை ஸோயி அமித ஜீவன பல பாவை …… (28) உனது அடியர்வர்கள் கொண்ட ஆசைகள் எல்லாம் உனது அருளால் வாழ்வெலாம் சித்தி பெறுமே! சாரோம் ஜுக பரதாப தும்ஹாரா ஹை பரசித்த ஜகத


உஜியாரா …. (29) யுகங்கள் நான்கிலும் உந்தன் புகழ் போற்றப்படுகிறதே உலகங்கள் முழுதும் உந்தன் பெருமை ஒளிர்கிறதே சாது சந்த கே தும ரக்வாரே அசுர நிகந்தன் ராம துலாரே……………………. (30) சாதுக்கள் ஞானிகளைக் காப்பவனும் அசுரர்களை அழிப்பவனும் இராமனுக்கினிய


நீயே! அஷ்ட ஸித்தி நெள நிதி கே தாதா அஸ வர தீன ஜானகி மாதா.. (31) சித்திகள் எட்டையும் நிதிகள் ஒன்பதையும் எவருக்கும் அளித்திடும் சக்திதனை உனக்கு வரமாய் அருளினாளே அன்னை ஜானகி

Friday 4 March 2016

ஹனுமான் சாலிசா (3)

லாய ஸஜீவன லகன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே (11) இளவலின் உயிரை சஞ்ஜீவினி மூலிகை கொணர்ந்து காத்தாய் அளவிலா ஆனந்தத்துடன் இராமனும் உன்னை நெஞ்சாரத் தழுவினார் ரகுபதி கீன்ஹி


பகுத படாயீ தும மம ப்ரிய பரத சம பாயீ (12) உந்தன் பெருமைகளை இராமன் மிகவும் புகழ்ந்தான் எந்தன் பரதன் போல நீயுமன்புத் தம்பி என்றான் ஸஹஸ பதன தும்ஹரோ யஷ காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட


லகாவைம் (13) உனது புகழை ஆயிரந்தலை ஆதிசேஷனும் பாடுவான் என்றுரைத்து தனது நெஞ்சார தழுவினான் அண்ணல் இராமனும் உன்னையே! ஸனகாதிக ப்ரஹ்மாதி முனிஸா நாரத ஸாரத ஸஹித


அஹிஸா (14) யம குபேர திக்பால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகே கஹாம் தே .. (15) ஸனகர் முதலிய முனிவர்கள் பிரம்மா போன்ற தெய்வங்கள் நாரதர் ஸரஸ்வதி ஆதிஸேஷன் காலன் குபேரன் திசைக்காவலர்கள் அறிஞர்கள் கலைஞர்கள் ஆகியோர் இவர்களில் எவருமே அறிந்திலரே உந்தன் பெருமையை முழுமையாய் வர்ணித்திட! தும உப்கார ஸுக்ரீவஹிம்


கீன்ஹா ராம மிலாய ராஜ்பத தீன்ஹா ………………………..(16) குரக்கினத் தலைவன் சுக்ரீவன் இராமனைக் கண்டு தனக்குரிய அரச பதவி பெற்றிட உதவினாயே! தும்ஹரோ மந்த்ர விபீஷன மானா லங்கேஷ்வர பயே ஸப ஜஹ ஜானா (17) உந்தன் அறிவிரைகளை ஏற்று அதன்படி நடந்து விபீஷணன் வேந்தன் ஆனான் இலங்கைக்கு என்பது அனைத்துலகும் அறிந்ததே! ஜுக


ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ ….. (18) பல ஆயிரம் யோஜனை அப்பாலிருந்த பகலவனை இனிய பழம் என்று எண்ணி பறித்து விழுங்கிவிட்டாயே! ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி


கயே அசரஜ நாஹீம் (19) அண்ணல் இராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தாங்கிய நீ விண்ணில் விரைந்து தரங்கத்தை தாண்டியதில் வியப்பேதும் இல்லையே! துர்கம காஜ ஜகத கே தேதே ஸுகம அனுக்ரஹ


தும்ஹரே தேதே (20) இவ்வுலகில் எத்தனை கடினமான காரியங்கள் ஆனாலும் வெகுயிலகு ஆகிவிடும் உந்தன் அருளாலே ராம துஆரே தும


ரக்வாரே ஹோத ந ஆங்யா பினு பைஸாரே ……….. (21) இராமனது வாயில் காவலன் நீ உனது அனுமதியின்றி யாரும் நுழைய முடியாதே! சப ஸுக


லஹை தும்ஹாரி ஸரனா தும ரக்‌ஷக காஹு கோ டர்னா ………………… (22) எல்லா சுகங்களும் கிட்டும் உந்தன் சரணங்களிலே நல்ல பாதுகாவலனாய் நீ இருக்கையில் பயமேன்? ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை தீனோம லோக


ஹாங்க தே காம்பை ……. (23) உன்னால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் உன்னாற்றலின் முன்னால் மூன்று உலகங்களும் நடுக்கம் கொள்ளுமே! பூத பிஷாச நிகட நஹீம் ஆவே மஹாவீர் ஜப நாம ஸுனாவே ……. (24) அருகில் அண்டிடாதே பூதங்களும் பேய்களும் பெரும் வீரன் உந்தன் நாமத்தைக் கேட்டாலே!

Saturday 27 February 2016

ஹனுமான் சாலிசா (2)

கஞ்சன பரன விராஜ ஸுவேஸா கானன குண்டல குஞ்சித கேஸா (4) 

பொன்னிற மேனியன் நீ! அழகிய உடைகளை அணிந்த்தவன் நீ! மின்னிடும் குண்டலங்கள் பூண்டவன்; சுருண்ட கேசம் கொண்டவன் ஹாத பஜ்ர ஒளர

த்வஜா பிராஜை காந்தே மூம்ஜ ஜனேவு ஸாஜை (5) வஜ்ரமும் கொடியும் கரங்களில் கொண்டவன் முஞ்சை புல்லாலான பூணூல் பூண்டவன் ஷங்கர

ஸுவன கேஸரி நந்தன தேஜ பிரதாப மஹா ஜகவந்தன (6) சங்கரன் அவதாரம் நீ, கேசரி குமாரன் நீ உந்தன் வீரத்திற்கும் புகழுக்கும் பாரே

வணங்கும் வித்யாவான குணி அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர (7) கூரிய மதியும் நற்குணமும் நிறைந்த மேதை நீ! சீரிய இராம சேவைக்காக ஆவலாய் காத்திருப்பாய் ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லகன ஸீதா

மன பசியா (8) இராம கதைக் கேட்பதில் பேரானந்தம் அடைவோனே! இராமன் இலக்குவன் சீதையை உள்ளத்தில் உடையோனே! சூக்‌ஷ்ம ரூப தரி ஸியஹிம் திகாவா விகட ரூப தரி லங்க ஜராவா (9) சிற்றுருவம் தரித்து சீதா பிராட்டிக்கு தோற்றமளித்தாய் பேருருவம் தரித்து இலங்கையை தீக்கு

இரையாக்கினாய். பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ரே கே காம ஸம்வாரே (10) பிரம்மாண்ட பேருருவம் தரித்து அரக்கர்களை அழித்தாய் ஆண்டவன் இராமனின் காரியங்களை நிறைவேற்றினாய்

Saturday 20 February 2016

ஹனுமான் சாலீசா (1`)

ஸ்ரீகுரு சரன ஸரோஜ ரஜ நிஜ மன முகுரு ஸுதாரி பர்ன(உ)ம் ரகுபர் பிமல் ஜஸு ஜோ தாயகு பல சாரி எனது மனது எனும் கண்ணாடியாம் அதை குருவினது திருவடி தூசியால் தூய்மை செய்து ’கனிகள் நான்கை’ அருளிடும் ரகுகுல திலகம் இனியன் இராமனின் இழுக்கிலா இசையை இயம்பிடுவேன். புத்திஹீன தனு ஜானிகே ஸூமிரெளம் பவன குமார பல புத்தி வித்யா தேஹு மோஹிம் ஹரஹு கலேஷ் விகார் குறைவான அறிவுடையோன் நான் என்று நன்கறிந்து விரைவான வாயுவின் குமாரன் உன்னைத் தியானிக்கிறேன். சக்தி,புத்தி,ஞானம் இவற்றை எனக்குத் தந்திடுவாய்! முக்தி அளித்திடுவாய் இடர்கள், இழுக்குகள் இவற்றினின்று. ஜய ஹனுமான ஞான குன ஸாகர ஜய கபீஸ திஹும் லோக உஜாகர (1) வெற்றி உனக்கே அனுமான்! நீ ஞானம் நற்குணம் இவற்றின் கடலாம் வெற்றி உனக்கே வானரத்தலைவா! நீ மூவுலகும் பரவிய கீர்த்திஉடையோன் ராம தூத அதுலித பல தாமா அஞ்சனி புத்ர பவனுஸுத நாமா (2) அண்ணல் இராமனின் தூதன் இணையிலா வலிமை மிக்கோன் அன்னை அஞ்சனை மைந்தன் வாயு புத்திரன் எனும் பெயருடையோன் மஹா வீர விக்ரம பஜரங்கி குமதி நிவார ஸுமதிகே சங்கி (3) மகா வீரன் நீ! பராக்கிரமும் பலமும் படைத்தவன் நீ! தகாத சிந்தைனைகளை அழிப்பவன் நீ! தூய சிந்தனையாளர் துணைவன் நீ!

Saturday 13 February 2016

அனுமன் சாலிஸாவின் மகிமை.

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர் " நீர் பெரிய ராமபக்தர், பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே....எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்".என்றார்.


நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே...என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்.  எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம். என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர்மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழிபட்டார்.  


இப்படி நாற்பது பாடல்கள் எழுதியதும்,திடீரென  எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள்  அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன. 


படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
 அக்பரிடம் சிலர் ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப் படுத்துவதால் ஆஞ்சநேயருக்கு கோபம் வந்திருக்கிறது. துளசிதாசரை விடுவித்தால் பிரச்சினை நீங்கிவிடும். என்று ஆலோசனை அளித்தனர். 


அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து  வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே  வானரப்படைகள் மாயமாய் மறைந்தன.


 துளசிதாசர் சிறையில் இருந்த போது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ஸ்ரீ அனுமான்சாலிஸா.  இதை தினமும் பாராயணம் செய்தால் துன்பங்கள் நீங்கும்.. நன்மைகள் தேடிவரும்....

அடுத்த பதிவாக  அனு
மான் சாலிஸா வை போடறதாக இருக்கேன்.

Sunday 7 February 2016

ஸௌந்தர்யலஹரி (2`1)(நிறைவு பகுதி)

96. "தேவியினுடைய பாதிவ்ரத்ய மஹிமை" 
[ஸரஸ்வதி கடாக்ஷம்; லக்ஷ்மீ கடாக்ஷம்] 

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி ப்ஹஜந்தே ந கவய: 
ச்ரியோ தேவ்யா: கோ ந பவதி பதி: கைரபி தனை: I 
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா-மசரமே 
குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப: II 
97. "பரப்ரம்ம மஹிஷியாகிய நீயே ஸரஸ்வதியும், லக்ஷ்மியும், பார்வதியும்" 
[ஜீவன் முக்தி] 

"கிராமாஹுர்-தேவீம் த்ருஹிண-க்ருஹிணீ-மாகமவிதோ 
ஹரே: பத்னீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரி-தநயாம் I 
துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம மஹிமா 
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி II 
98. "பாத தீர்த்தம் ஊமையையும் பேச வைக்கும்" 
[வாக் ஸித்தி] 

கதா காலே மாத: கதய கலிதாலக்த-கரஸம் 
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண-நிர்ணேஜன-ஜலம் I 
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா-காரணதயா 
கதா தஸ்தே வாணீ-முக-கமல-தாம்பூல ரஸதாம் II 
99. "தேவியை வழிபடுபவன் கல்வி, செல்வ, அழகு, ஆயுள்
இவையனைத்தும் நிரம்பியவன் ஆவான்" [பேரின்பம்] 
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி ஸபத்னோ விஹரதே 
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா I 
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாச-வ்யதிகர: 
பாராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்-பஜநவான் II 
100. "தேவியளைத்த சக்தியால் தேவியைப் பாடியது, சூரியனுக்கு
அவன் கிரணத்து அக்கினியால் தீபாராதனை செய்தது போலாம்" 
[ஸகல ஸித்தி] 

ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜனவிதி; 
ஸுதா-ஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்ய-ரசனா I 
ஸ்வகீயை-ரம்போபி: ஸலில-நிதி-ஸௌஹித்ய கரணம் 
த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துத்ஹிரியம் II
 


Monday 1 February 2016

ஸௌந்தர்யலஹரி (20)

91. " தேவியின் நடையழகு" [பூமி லாபம்; தன லாபம்] 
பதந்யாஸ-க்ரீடா-பரிசய-மிவாரப்து-மனஸ: 
ஸ்கலந்தஸ்-தே கேலம் பவன-கல-ஹம்ஸ ந ஜஹதி I 
அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபகமணி-மஞ்ஜீர ரணித 
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருரிதே II 
92. "தேவியின் இருக்கை" [ஆளும் திறமை] 
கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி-ருத்ரேச்வர-ப்ருத: 
சிவ: ஸ்வச்ச-ச்சாயா-கடித-கபட-ப்ரச்சதபட: I 
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன-ராகாருணதயா 
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் II 
93. "சிவனுடைய கருணையின் உருவே தேவி' 
[மனோரத சித்தி] 

அராலா கேசேஷு ப்ரக்ருதி-ஸரலா மந்த-ஹஸிதே 
சிரீஷாபா சித்தே த்ருஷதுபல-சோபா குசதடே I 
ப்ருசம் தன்வீ மத்யே ப்ருது ருரசி ஜாரோஹ விஷயே 
ஜகத் த்ராதும் சம்போர்-ஜயதி கருணா காசி தருணா II 
94. "தேவியின் உபயோகத்திற்காக நிரப்பப்பெற்ற ஜலபாண்டம்
போன்றது சந்திர பிம்பம்" [இஷ்ட ப்ராப்தி] 
கலங்க: கஸ்தூரீ ரஜநிகர-பிம்பம் ஜலமயம் 
கலாபி: கர்ப்பூரைர்-மரகத-கரண்டம் நிபிடிதம் I 
அதஸ்-த்வத்-போகேன ப்ரதிதின-மிதம் ரிக்த-குஹரம் 
விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூனம் தவ க்ருதே II 
95. "இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி
வழிபட இயலாது" [இஷ்ட ப்ராப்தி] 
புராராதே-ரந்த: புரமஸி ததஸ்-த்வச்சரணயோ: 
ஸபர்யா-மர்யாதா தரல-கரணானா-மஸுலபா I 
ததா ஹ்யேதே நீதா: சதமகமுகா: ஸித்திமதுலாம் 
தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யபி-ரமரா: II 

Friday 29 January 2016

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhiகுசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை[1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.
இளமை வயதில் காந்தியடிகள், வயது 7, 1876
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்திஇங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில்சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.

இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.
அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன்தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.
தென்னாப்பிரிக்காவில் காந்தி (1906)
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.

1915 -ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.
அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். (தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து வெளிநாடுவாழ் இந்தியர் நாள்கொண்டாடப்படுகின்றது)[2]
இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.[3][4]

பகவத் கீதைஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். இவர் தனது காமத்தை வெல்லும் பொருட்டு பல்வேறு சோதனைகளைச் செய்து வந்தார். அவை பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது மனைவியின் அனுமதியுடன் தான் செய்தார். இவை இன்றளவும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதிஉடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

(மஹாத்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு பதிவு போட எண்ணி நிறைய பத்திரிககளை படித்து குறிப்புகள் எடுத்தேன். பதிவு மிகவும் பெரிதாக போகிறதே என்று பாதியிலேயே நிறுத்தவேண்டிய கட்டாயம். முழுவதுமாக பதிவு போட முடியல  ஸாரி)