Tuesday 5 July 2016

abiraami 3 , 4, 5

குடும்பக்கவலையிலிருந்து விடுபட
3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
உயர்பதவிகளை அடைய
4: மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
மனக்கவலை தீர
5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

2 comments:

  1. ஆஹா, இந்தப்பதிவினைப் படித்ததுமே ... அபிராமியின் அருளால்

    குடும்பக்கவலையிலிருந்து விடுபட்டது போலவும், உயர் பதவிகளை அடைந்தது போலவும், மனக்கவலைகள் தீர்ந்தது போலவும் உணர முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள் ஸார்..

    ReplyDelete